“மோடியும்.. அமித் ஷாவும்.. கிருஷ்ணா, அர்ஜூனா போன்றவர்கள்” - ரஜினிகாந்த் புகழாரம்

“மோடியும்.. அமித் ஷாவும்.. கிருஷ்ணா, அர்ஜூனா போன்றவர்கள்” - ரஜினிகாந்த் புகழாரம்

“மோடியும்.. அமித் ஷாவும்.. கிருஷ்ணா, அர்ஜூனா போன்றவர்கள்” - ரஜினிகாந்த் புகழாரம்
Published on

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கிருஷ்ணா, அர்ஜூனா போன்றவர்கள் என நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூடினார்.

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதியுள்ள ஆவண புத்தகம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய ரஜினிகாந்த், “ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டது பாராட்டுக்குறியது; நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜுனர் போன்றவர்கள்; இதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com