”எங்கள் திருமணத்தை செல்லாது என அறிவிக்கவேண்டும்” விவாகரத்து கோரி தனுஷ், ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் மனு!

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்துக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
Dhanush Aishwarya
Dhanush Aishwarya pt desk

செய்தியாளர்: T.சந்தானகுமார்

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து வந்த நிலையில், அவர்களுடைய காதலுக்கு இரண்டு குடும்பங்களும் இருந்தும் பச்சைக் கொடி காட்ட, கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 தேதி தனுஷ் - ஐஸ்வர்யா திருமணம் சென்னையில் நடந்தது. இந்நிலையில், இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

Actor Dhanush Aishwarya
Actor Dhanush Aishwarya

இந்நிலையில், இவர்களது 20 ஆண்டு கால திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் ட்விட்டர் பக்கத்தில் தாங்கள் பிரிந்துள்ளதாக பதிவிட்டனர். தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்னையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினரும், நண்பர்களும் ஈடுபட்டதாகவும் ஆனால், இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்பட்டது.

Dhanush Aishwarya
“ஓட்டுக்கு பணம் வாங்குவதில் தப்பில்லை; ஆனால்...” - விஜய் ஆண்டனி பரபரப்பு பேச்சு

இதைத் தொடர்ந்து இருவரும் தங்களுடைய திருமண வாழ்வை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்துக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com