மனைவியுடன் முதல் ஆளாக வந்து வாக்கினை பதிவு செய்த நடிகர் அஜித்

மனைவியுடன் முதல் ஆளாக வந்து வாக்கினை பதிவு செய்த நடிகர் அஜித்
மனைவியுடன் முதல் ஆளாக வந்து வாக்கினை பதிவு செய்த நடிகர் அஜித்

மனைவி ஷாலினியுடன் வாக்களிக்க சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்த நடிகர் அஜித், அங்கு தனது வாக்கினைப் பதிவு செய்தார். 

தமிழகத்தின் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் நடிகர் அஜித் வாக்களிப்பதற்காக மனைவி ஷாலினியுடன் சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்தார். அங்கு அஜித் மற்றும் ஷாலினி இருவரும் மக்களோடு மக்களாக வரிசையின் நின்று வாக்களித்துவிட்டு சென்றனர். தற்போது கொரோனா வேகமாக பரவிவருவதால் தன்னை காண்பதற்காக கூட்டம் கூடிய ரசிகர்களை நகர்ந்து செல்லுமாறும் செல்ஃபி எடுக்க வேண்டாம் எனவும் அஜித் ரசிகர்களிடம் அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com