மீட்புப் பணி நடைபெறும் இடத்தில், ஓரமாக நடிகர் தாமு பிரார்த்தனை..!

மீட்புப் பணி நடைபெறும் இடத்தில், ஓரமாக நடிகர் தாமு பிரார்த்தனை..!
மீட்புப் பணி நடைபெறும் இடத்தில், ஓரமாக நடிகர் தாமு பிரார்த்தனை..!

நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை மீட்புப் பணி நடைபெற்று வரும் இடத்தில் நடிகர் தாமு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், கடந்த 25ம் தேதி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 61 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஆழ்துளைக் கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழித் தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 40 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும் மற்றொரு புறம் குழந்தை சுர்ஜித்திற்காக தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகளும் நடைபெறுகின்றன. எப்படியாவது குழந்தை சுர்ஜித் ஆரோக்கியமாக மீட்கப்பட வேண்டும் என பலரும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தாமு, குழந்தை மீட்புப் பணி நடைபெறும் இடத்திற்கு இன்று காலை சென்றார். அதன் அருகே ஒரு இடத்தில் அமர்ந்த தாமு, குழந்தைக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com