அனைத்துப் பொருட்களும் கிடைக்க நடவடிக்கை: முதலமைச்சர்

அனைத்துப் பொருட்களும் கிடைக்க நடவடிக்கை: முதலமைச்சர்

அனைத்துப் பொருட்களும் கிடைக்க நடவடிக்கை: முதலமைச்சர்
Published on

தமிழகத்தில் பொது விநியோகக் கடைகளில் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப்பொருள்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

பொதுவிநியோகக் கடைகளில் பருப்பு, பாமாயில், கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்கள் கடந்த 3 மாதங்களாக விநியோகிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், புதிய தலைமுறை கள ஆய்வு மேற்கொண்டது. அதில், கடந்த 3 மாதங்களாகப் பொது விநியோகக் கடைகளில் பருப்பு, பாமாயில் போன்றவை விநியோகிக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து பொதுவிநியோகக் கடைகளிலும் பருப்பு உள்ளிட்ட பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com