விசாரணைக்குப் பின் ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை உறுதி: முதல்வர் ஸ்டாலின்

விசாரணைக்குப் பின் ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை உறுதி: முதல்வர் ஸ்டாலின்

விசாரணைக்குப் பின் ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை உறுதி: முதல்வர் ஸ்டாலின்
Published on

ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக விரைவில் விசாரணை கமிஷன் அமைத்து, ஒப்பந்ததாரர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மூன்றாவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் உள்ள கோபாலபுரம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை போட்டு, மத்திய அரசிடம் இருந்து நிதியை வாங்கி என்ன செய்தார்கள் என தெரியவில்லை. இந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகு விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என கூறினார்.

மேலும், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான உள்ளாட்சித் துறையில் எதுவுமே சரியாக நடைபெறவில்லை என குற்றம் சாட்டிய அவர், வேலுமணி கமிஷன் பெற்றுள்ளது நன்றாக தெரிகிறது. தற்போது சமாளித்து பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நிச்சயமாக உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com