சென்னைக்கு உட்பட்ட இடங்களில் 181.98 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டிருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதற்காக ஐநூறுக்கும் அதிகமான குப்பைகளை அகற்றும் வாகனங்கள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.