கண் இமைக்கும் பொழுதில் மகளுடன் லாரி சக்கரத்தில் சிக்கிய தாய் - சிசிடிவி
சில நொடிகள் கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்தில் தாயும் குழந்தையும் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டமலை பகுதியை சேர்ந்த சித்ரா, ஈரோடு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இவர் தனது 6 வயது மகள் இன்சிகாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்கு நின்ற நிலையில், பள்ளிப்பேருந்து ஒன்று சாலையை கடந்தது. அப்போது, சாலையின் ஒருபுறத்தை கவனிக்காமல் சித்ரா கடக்க முயன்றபோது, அந்த வழியாகச் சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய சித்ராவும், அவரது மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு சில விநாடிகள் காத்திருந்து சாலையின் இருபக்கத்திலும் வாகனம் ஏதும் வராததை உறுதி செய்த பின்னர் சாலையை கடந்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.