கடந்த 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் நடந்த அன்னை தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அப்துல் கலாம் குறிஞ்சி மலரை பற்றி உடனடியாக கவிதை ஒன்றை எழுதி வாசித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திற்கு கடந்த செப்டம்பர் 23, 2006 ஆம் வருடம் டாக்டர் அப்துல் கலாம் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை புரிந்தார். இவருடன் அப்போதைய தமிழக ஆளுநராக இருந்த சுர்ஜீத் சிங் பர்னாலாவும் வருகை புரிந்தார்.
பட்டமளிப்பு விழாவில் பேசிய அப்துல் கலாம் கொடைக்கானலில் மலரும் அரிய வகை மலரான குறிஞ்சி மலரைப் பற்றி கவிதை உடனடியாக எழுதி அதனை வாசித்தார். இதனைக் கேட்ட பல்கலைக்கழக மாணவிகளும், ஆசிரியர்களும், பொதுமக்களும் கைதட்டி ஆராவாரம் புரிந்தனர்.