வேலூர் ஆவின் பால்நிலையத்தில் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் ஆவின் பால் நிலையத்தில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்ததையடுத்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். அப்போது, மது பாட்டில்கள் ஒரு பெட்டி முழுவதும் இருப்பது தெரியவந்தது. இது குறித்து புதிய தலைமுறையில் செய்தி ஒளிபரப்பான நிலையில் ஆவின் பாலகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.