தீபாவளிக்காக நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு - மாடு முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு

தீபாவளிக்காக நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு - மாடு முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு
தீபாவளிக்காக நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு - மாடு முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு

திருமயம் அருகே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற நிலையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர். கிராமத்தில் உள்ள கண்மாயில் நடைபெற்ற இப்போட்டியில், சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் பிடித்தனர். இதை பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கைதட்டி ரசித்தனர்.

காளையை அடக்க முயன்ற போது மாடு முட்டியதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு விராச்சிலை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் மாடு முட்டியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞர் மேலப்பனையூர் கிராமத்தை சேர்ந்த யோகநாதன் (18) என்பது விசாரணையில் தெரியவந்தது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com