4 ஆண்டுகளாக மாணவிக்கு பாலியல் தொல்லை - ‘போக்சோ’வில் வாலிபர் கைது

4 ஆண்டுகளாக மாணவிக்கு பாலியல் தொல்லை - ‘போக்சோ’வில் வாலிபர் கைது
4 ஆண்டுகளாக மாணவிக்கு பாலியல் தொல்லை - ‘போக்சோ’வில் வாலிபர் கைது

ஈரோடு அருகே 4 ஆண்டுகளாக கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
 
ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராதாகிருஷ்ணன். இவர் அதே பகுதியில் ஜவுளி வியாபாரமும் ரியல் எஸ்ட்டேட் தொழிலும் செய்து வருகிறார். ராதாகிருஷ்ணன் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனியார் கல்லூரியில் படித்த அந்த மாணவியின் தோழிகளுக்கும் அவ்வபோது ஆபாச வீடியோவை அனுப்பி அவர்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி தனக்கு நிகழ்ந்ததை பெற்றோருடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணவியின் பெற்றோர், ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் அந்த புகாரின் அடிப்படையில் ராதாகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராதாகிருஷ்ணனை சிறையில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com