வெங்காயம் அறுவடையில் ஈடுபட்டிருந்த பெண் மீது இடிதாக்கி பரிதாபமாக உயிரிழப்பு

வெங்காயம் அறுவடையில் ஈடுபட்டிருந்த பெண் மீது இடிதாக்கி பரிதாபமாக உயிரிழப்பு
வெங்காயம் அறுவடையில் ஈடுபட்டிருந்த பெண் மீது இடிதாக்கி பரிதாபமாக உயிரிழப்பு

காரியாபட்டி அருகே இடி மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இருவர் காயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சாலைமரைக்குளம் கிராமத்தில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது தோட்டத்தில் வெங்காயம் அறுவடை செய்து கொண்டிருந்த செல்லப்பா என்பவரின் மனைவி ராமு, சுப்பிரமணியின் மனைவி சிகப்பி அவரது பேரன் வெற்றிவேல் ஆகிய மூவர் மீதும் இடி மின்னல் தாக்கியுள்ளது.

இதில், மூவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ராமு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதை தொடர்ந்து அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காயமடைந்த சிகப்பி, வெற்றிவேல் ஆகிய இருவரும் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அ.முக்குளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com