நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும் கூட ஒரு ஆண்டாக காவல்துறை வழக்குப்பதிவு செய்யாமல் இருந்தது. கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களை கூறி வந்த காவல்துறையினர் கடந்த 16-ம்தேதி காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள விஜய கோபாலன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அயனாவரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் விஜய கோபாலன் மீது 294- ஆபாசமாக திட்டுதல், 509- பெண்ணை மானபங்கப்படுத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டிஎன்ஏ சோதனை மூலம் தன்னுடைய தந்தை விஜய கோபாலன் தான் என்பதனை நீதிமன்றம், ஊருக்கு சொல்லியிருப்பதாக இளவரசியின் மகள் தேவி மனமகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார். இதனால் தானும் தாயாரும் சந்தித்த வேதனைகள், அவமானங்கள் கொஞ்சமல்ல என்கிறார் தேவி.