பேஸ்புக்கில் ஆசை வார்த்தை கூறி தொழிலதிபரிடம் கைவரிசை! கூண்டாக சிக்கிய மோசடி பெண்ணும், கூட்டாளிகளும்!

பேஸ்புக் மூலம் ஆசை வார்த்தை கூறி சேலம் தொழிலதிபரை நெல்லைக்கு வரவழைத்து 10 லட்சம் பணம் நகைகளை பறித்த பெண் மற்றும் அவரது கூட்டாளிகள் அதிரடி கைது.!!
10 லட்சம் பண மோசடி
10 லட்சம் பண மோசடிபுதிய தலைமூறை

சேலம் மாவட்டம் அய்யன் பெருமாள் பட்டியை சேர்ந்தவர் தொழிலதிபர் நித்தியானந்தம் (47). இவர் காற்றாலைகளுக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று நெல்லை அருகே பொன்னாக்குடி பகுதியில் பெண் உட்பட ஐந்து பேர் சேர்ந்து நித்தியானந்தத்தை கடத்தி வைத்திருந்துள்ளதாக நித்தியானந்ததின் நண்பர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அக்கும்பலிடம் இருந்து நித்தியானந்தத்தை மீட்டு நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது, நெல்லை பெருமாள் வரும் என் ஜிஓ காலனி சேர்ந்த பானுமதி(40) என்ற பெண் முகநூல் மூலம் நித்தியானந்தத்திடம் பழகி வந்துள்ளார். பின்னர், ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருக்கலாம் வாங்க என நெல்லைக்கு வரும்படி அழைத்துள்ளார். பானுமதியின் பேச்சை நம்பி நெல்லைக்கு வந்த நித்தியானந்தம் பெருமாள்புரம் பகுதிதியில் உள்ள ஒரு விடுதியில் வைத்து பானுமதியை தனியாக சந்தித்துள்ளார்.

இந்நிலையில், திடீரென நான்கு பேர் கொண்ட கும்பல் அந்த அறைக்குள் நுழைந்துள்ளனர். இதனையடுத்து அப்பெண் தன்னை ஏமாற்றியுள்ளார் என நித்யானந்தத்திற்கு தெரியவந்துள்ளது. பானுமதி மற்றும் அவரது கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெள்ளத்துரை பார்த்தசாரதி, ரஞ்சித், சுடலை ஐந்து பேரும் சேர்ந்து கத்தி முனையில் நித்தியானந்தம் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகைகளை பறித்ததோடு ஏடிஎம் கார்டில் இருந்து 60,000 ஆன்லைன் பண பரிவர்த்தனை முறையில் 75,000 என ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து காசோலையில் கையெழுத்து வாங்கி 10 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து தரும்படி வங்கி ஒன்றிற்கு நித்தியானந்தத்தை அக்கும்பல் அழைத்து சென்றுள்ளது. பணம் தரவில்லை என்றால் தன்னை கற்பழித்து விட்டதாக போலீசாரிடம் புகார் அளித்து விடுவேன் என்று பானுமதி மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு ஒப்பு கொண்டு இவர், தனது பணத்தை இழந்தநிலையில், தனது நண்பரிடம் தான் ஏமாற்றப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, போலீசார் அதிரடியாக களத்தில் இறங்கி முப்பது நிமிடத்திற்குள் பானுமதி மற்றும் அக்கும்பலை சுற்றி வளைத்து நித்தியானந்தத்தை மீட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து அக்கும்பலிடம் நடத்திய விசாரணையில் பானுமதி இது போன்று பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளம் மூலம் அரசு ஊழியர்கள் தொழிலதிபர்கள் என பல்வேறு நபர்களை ஏமாற்றி பல லட்சம் பணத்தை பறித்தது தெரியவந்துள்ளது.

10 லட்சம் பண மோசடி
நாமக்கல் - ஹோட்டலில் வாங்கப்பட்ட சிக்கன் ரைஸ்.. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருவர் அனுமதி

இதற்கிடையில், இந்த விவகாரத்தில் அதிரடியாக செயல்பட்டு 30 நிமிடங்களுக்குள் குற்றவாளிகளை கைது செய்து தொழிலதிபரை மீட்ட போலீசாரை மாநகர காவல் ஆணையர் மூர்த்தி நேரில் அழைத்து பாராட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com