கள்ளக்குறிச்சியில் பெண் மர்மமான முறையில் மரணம்
கள்ளக்குறிச்சிpt

கள்ளக்குறிச்சி | சோளக்காட்டிற்குள் சடலமாக கிடந்த பெண்.. அதிர்ச்சியில் கிராம மக்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நிர்மலா. இவருடைய கணவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கரவை மாடு வைத்து பால் வியாபாரம் செய்து வந்த நிர்மலா, நேற்று மாலை வழக்கம்போல் பால் ஊற்றுவதற்காக அருகில் இருக்கும் பால் சேகரிக்கும் மையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமகியும் வீடு திரும்பாததால் பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடிவந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் பெண் மர்மமான முறையில் மரணம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. கைதானவரின் பகீர் பின்னணி!

மர்மமான முறையில் இறந்துகிடந்த பெண்..

நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்த நிலையில், நிர்மலா வீட்டு அருகே உள்ள சோளக்காட்டில் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்து. அங்கு சென்று பார்த்தபோது நிர்மலா சடலமாக உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சின்னசேலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நிர்மலாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் பெண் மர்மமான முறையில் மரணம்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – குற்றவாளிக்கு மாவுக்கட்டு; 15 நாள் நீதிமன்ற காவல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com