சென்னை ஐஐடியில் மூன்றாம் ஆண்டு மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

சென்னை ஐஐடியில் மூன்றாம் ஆண்டு மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு
சென்னை ஐஐடியில் மூன்றாம் ஆண்டு மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

சென்னை ஐஐடியில் பயின்றுவரும் மூன்றாம் ஆண்டு மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை ஐஐடியில் பி.டெக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த  வைப் புஷ்பக் ஸ்ரீ சாய். இவர் ஐஐடியில் உள்ள அலக்நந்தா தங்கும் விடுதியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அதன்பின் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்வதற்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மாணவர் இறப்பு குறித்து அவரது உறவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. எதற்காக மாணவர் தற்கொலை செய்து கொண்டார், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஐஐடியில் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர் இறப்புக்கு ஐஐடி பேராசிரியர்  இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com