எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் திறப்பு

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் திறப்பு

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் திறப்பு
Published on

எம்.பி.,எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவ‌லக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு நீதிமன்றத்தை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான 265க்கும் அதிகமான வழக்குகள் இந்த சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளன. சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக ஜெ.சாந்தி நியமிக்கப்‌பட்டுள்ளார். நாடு முழுவதும் 12 சிறப்பு நீதிமன்‌றங்கள் அமைக்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் இன்று சிறப்பு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com