தி.மலை: வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்குச் சென்ற ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தி.மலை: வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்குச் சென்ற ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தி.மலை: வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்குச் சென்ற ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்குச் சென்ற ஆசிரியை வீட்டில் 25 சவரன் நகைகள், ஒரு லட்சம் பணம் கொள்ளை போன சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம் பேட்டை என்ஜிஓ.நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் திரிபுரசுந்தரி. ஆசிரியர் பயிற்றுநராக பணியாற்றி வரும் இவர், கடந்த வெள்ளிக்கிழமை திண்டிவனத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பூட்டிய அறையில் பையில் வைத்திருந்த ஆரம், நெக்லஸ், தாலி உள்ளிட்ட 25 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திரிபுரசுந்தரி, சேத்துப்பட்டு போலீசில் அளிந்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், தடயங்களை சேகரித்து வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com