ஆ.ராசா நீதிபதி போல் கருத்து தெரிவிக்கிறார் -அமைச்சர் காமராஜ்

ஆ.ராசா நீதிபதி போல் கருத்து தெரிவிக்கிறார் -அமைச்சர் காமராஜ்
ஆ.ராசா நீதிபதி போல் கருத்து தெரிவிக்கிறார் -அமைச்சர் காமராஜ்

வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஆ.ராசா, நீதிபதி போல் கருத்து தெரிவித்து வருகிறார் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் முகாமை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுகவின் மாவட்ட செயலாளர் சென்ற முறையில் மன்னார்குடியில் இரண்டு இடங்களில் நடைபெற்ற வாக்கு சேகரிக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டதாக தெரிவித்தார்

மேலும் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடத்தப்படும் வாக்கு சேகரிக்கும் பணிகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. தற்போது இளம் வாக்காளர்கள் அதிக அளவில் வந்து சேர்வது நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்பதை வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

பாஜக மாநில மகளிர் அணித்தலைவர் வானதி சீனிவாசன் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர், அதிமுக மீது எந்த வழக்கும் இல்லை. எனவே எந்த ஒரு விசாரணைக்கும் அதிமுக தயாராக இருக்கிறது. திமுகவை சேர்ந்த ஆ.ராசா மீதான வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போது அது குறித்த கருத்துக்களை தெரிவிக்கலாமே தவிர ஆ.ராசா தீர்ப்பு வழங்குவது போல் பேசி வருவதாக தெரிவித்தார்.

திராவிட கட்சிகளை ஒருபோதும் அளிக்க முடியாது என்ற நோக்கத்தில் தான் கே.பி.முனுசாமி தனது கருத்தை தெரிவித்திருப்பார் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com