\
தண்ணீர் தேங்கியிருந்த தரைப்பாலத்தில் சிக்கிக் கொண்ட தனியார் பள்ளி பேருந்து

தண்ணீர் தேங்கியிருந்த தரைப்பாலத்தில் சிக்கிக் கொண்ட தனியார் பள்ளி பேருந்து

தண்ணீர் தேங்கியிருந்த தரைப்பாலத்தில் சிக்கிக் கொண்ட தனியார் பள்ளி பேருந்து
Published on

ஊத்தங்கரை அருகே தரைப்பாலத்தில் தனியார் பள்ளி பேருந்து சிக்கிக் கொண்டதால் பரபரப்பு எற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி அருகே உள்ள குள்ளம்பட்டி ரயில்வே தரைப்பாளத்தில் மழை நீர் தேங்கியிருந்த குறைவான தண்ணீர் உள்ளதாக நினைத்த ஓட்டுநர், தரைப்பாலத்தில் தரை பாலத்தில் சென்றுள்ளார் அப்போது பாலத்தின் உட்பகுதியில் வாகனம் சிக்கிக் கொண்டது.

இதனால் உள்ளே இருந்த நபர்களை வெளியே மீட்க முடியாமல் இருந்த நிலையில், ஊத்தங்கரை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஓட்டுநர் மற்றும் பள்ளியில் பணியாற்றும் பெண் ஒருவரையும் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட இரண்டு நபர்களும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு சென்றனர். நீரில் சிக்கிய வாகனத்தை டிராக்டர் மூலமாக வெளியே எடுக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com