தென்காசி: விசாரணைக்காக வந்த காவலர் மீது சாக்கடை கழிவுகளை வீசி தாக்கிய மதுபோதை நபர் -வீடியோ

தென்காசி: விசாரணைக்காக வந்த காவலர் மீது சாக்கடை கழிவுகளை வீசி தாக்கிய மதுபோதை நபர் -வீடியோ
தென்காசி: விசாரணைக்காக வந்த காவலர் மீது சாக்கடை கழிவுகளை வீசி தாக்கிய மதுபோதை நபர் -வீடியோ

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விசாரணைக்கு சென்ற காவலர் மீது மதுபோதை ஆசாமி சாக்கடையில் உள்ள கழிவுகளை அள்ளி வீசி எறிந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

கல்லத்தி குளத்தைச் சேர்ந்த அசோகன் என்பவர் கடந்த 22 ஆம்தேதி மதுபோதையில் மக்களிடம் தகராறு செய்துள்ளார். மக்கள் அளித்த தகவலின் பேரில், எஸ்.பி. உத்தரவால் சின்ன கோவிலாங்குளம் காவல்நிலைய ஏட்டு பாலகிருஷ்ணன் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அசோகன் காவலரிடம் தகராறு செய்துள்ளார்.

தொடர்ந்து காவலர் விசாரணை செய்ததால் ஆத்திரமடைந்த அசோகன் அவர் மீது சாக்கடை கழிவுகளை அள்ளி வீசி தாக்கினார். இதன்பிறகே தன்னை தற்காத்துக்கொள்ள காவலர் பதிலுக்கு தாக்கினார். இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. சம்பவம் தொடர்பாக ஏட்டு பாலகிருஷ்ணன், கல்லத்திகுளத்தை சேர்ந்த அய்யாத்துரை ஆகியோர் அளித்த புகாரின்பேரில் சின்னகோவிலான்குளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com