தருமபுரி: 2 குழந்தைகளுடன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட தாய்!

தருமபுரி: 2 குழந்தைகளுடன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட தாய்!

தருமபுரி: 2 குழந்தைகளுடன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட தாய்!
Published on

தருமபுரி மாவட்டத்தில் தாய், இரண்டு குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர்.

தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அடுத்த தொட்டபாவளி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி மணிகண்டன்-லட்சுமி தம்பதியினருக்கு பிரசாந்த் (4), லதா (6 மாதம்) என இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன், லட்சுமி தனது இரு குழந்தைகளுடன் வீட்டு விட்டு வெளியில் சென்றதாக கூறி, அவரது உறவினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். நேற்றிரவு, அருகே இருந்த கிணற்றை சந்தேகமாக பார்த்த போது, அதில் லட்சுமி மற்றும் 2 குழந்தைகள் கிணற்றில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து மாரண்டஹள்ளி காவல் நிலையத்திற்கும், பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்த மாரண்டஅள்ளி காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றில் இருந்த 3 உடல்களையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துமனை மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த மாரண்டஹள்ளி காவல் வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இரண்டு குழந்தைகளுடன், தாய் கிணற்றில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com