பொன்பரப்பி சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் சென்னையில் கைது !

பொன்பரப்பி சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் சென்னையில் கைது !
பொன்பரப்பி சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் சென்னையில் கைது !

பொன்பரப்பி சம்பவம் குறித்து டிக்டாக் செயலியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையை சிலர் உடைத்ததாக மோதல் ஏற்பட்டது. இதனால் மற்றொரு தரப்பினர் மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் பொன்பரப்பி கிராம குடியிருப்பில் புகுந்து 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரையை உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து, தாக்குதல் தொடர்பாக 25-க்கும் மேற்பட்டோர் மீது  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பொன்பரப்பியில் நடந்த சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசியவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். டிக்டாக் செயலியில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக விஜயகுமார் என்பவரை அசோக்நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com