துப்புரவுப் ‌பணி‌யாளர் பணிக்கு தேர்வான பட்டதாரி பெண்

துப்புரவுப் ‌பணி‌யாளர் பணிக்கு தேர்வான பட்டதாரி பெண்
துப்புரவுப் ‌பணி‌யாளர் பணிக்கு தேர்வான பட்டதாரி பெண்

துப்புரவுப் ‌பணி‌யாளர் பணிக்கு விண்ணப்பித்த பட்டதாரி‌‌ப் பெண்‌ நேர்காணலில் தேர்வாகி பணிநியமன ஆணையைப் பெற்றுள்ளார்.

கோவை மா‌நகராட்சியில், ‌2 ஆயிரத்து 52‌0 நிரந்தர துப்புரவுத் தொழிலாளர்கள் பணி‌யாற்றி வருகி‌றானர். இங்கு, 549 பணியிடங்கள்‌‌ காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்‌டதை‌ அடுத்து, அதற்கு பட்‌டதாரி‌கள் உள்பட‌ ஆயிரக்கணக்கானோர்‌ விண்‌ணப்பித்திருந்தனர். இதற்கான‌ நேர்காணலில் திரளான பட்டதாரிகள் பங்கேற்று இருப்‌பது தொடர்பாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது.

இந்நிலையில், பிஎஸ்சி படித்த மோனி‌கா உள்ளிட்‌ட பல பட்டதாரி‌கள் நேர்காணலில் தேர்ச்சி பெற்று, பணி நியமன ஆணையை பெற்றுள்ளனர்‌. மொத்தமாக ‌321 பேருக்கு துப்புரவுத் தொழிலாளர்‌ பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. படித்த படிப்பிற்கு தகுதியான வேலை கிடைக்காததால், துப்புரவு‌த் தொழிலாளர் பணிக்கு விண்ண‌ப்பித்ததாக பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்புரவுத் தொழிலாளர் பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com