திருமணமான 5 மாதங்களில் பெண் தற்கொலை : விருதுநகரில் சோகம்

திருமணமான 5 மாதங்களில் பெண் தற்கொலை : விருதுநகரில் சோகம்
திருமணமான 5 மாதங்களில் பெண் தற்கொலை : விருதுநகரில் சோகம்

விருதுநகரில் திருமணமாகி 5 மாதங்களே ஆன பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள நரிக்குடியை சேர்ந்த கந்தன் என்பவரது மகன் முத்துமுருகன். இவர் நரிக்குடி அருகில் உள்ள எஸ்.வள்ளக்குளம் அரசு ஆரம்ப பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி முதல் மனைவி விவாகரத்து ஆன நிலையில், உறவினர் ராமு என்பவரது மகள் பழனி (எ) ஊர்வசியை கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் செய்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சிறுசிறு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதனிடையே இன்று முத்துமுருகன் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஊர்வசி தனது உடலில் மண்ணெண்ய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ஊர்வசியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து தீயை அனைத்து காப்பாற்ற முயற்சித்துள்ளனர். மளமளவென பற்றிய தீ வீடு முழுவதும் பரவியதால் ஊர்வசி பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவல் அறிந்து வந்த நரிக்குடி காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சுழி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் செல்லப்பா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com