மதுரை: காரை தள்ளி நிறுத்துமாறு கூறியதால் வாக்குவாதம்; கேபிள் டிவி ஊழியர் கொலை

மதுரை: காரை தள்ளி நிறுத்துமாறு கூறியதால் வாக்குவாதம்; கேபிள் டிவி ஊழியர் கொலை
மதுரை: காரை தள்ளி நிறுத்துமாறு கூறியதால் வாக்குவாதம்; கேபிள் டிவி ஊழியர் கொலை
மதுரை மேலூர் அருகே காரை சற்று தள்ளி நிறுத்துமாறு கூறியபோது ஏற்பட்ட தகராறு முற்றி கொலையில் முடிந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே தனியார் கேபிள் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. அலுவலக வாயில் முன்பு ஒருவர் காரை நிறுத்திய நிலையில் அதை சற்றுத்தள்ளி நிறுத்துமாறு கூறி கேபிள் அலுவலக ஊழியர் ராஜா கூறியுள்ளார். இதனால் கார் ஓட்டுநருக்கும் ராஜாவுக்கும் கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
அப்போது கார் ஓட்டுநருக்கு ஆதரவாக வந்த சிலர் ராஜாவை கம்பு, கம்பிகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே ராஜா உயிரிழந்தார். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com