வெறிநாய் கடித்த நிலையில் சாலையில் செல்வோரை விரட்டி விரட்டிக் கடித்த பசுமாடு

வெறிநாய் கடித்த நிலையில் சாலையில் செல்வோரை விரட்டி விரட்டிக் கடித்த பசுமாடு

வெறிநாய் கடித்த நிலையில் சாலையில் செல்வோரை விரட்டி விரட்டிக் கடித்த பசுமாடு
Published on

அறந்தாங்கி அருகே பெருங்காட்டில் 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த வெறிபிடித்து பசுவை, கிராம இளைஞர்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்காடு கிராமத்தில் உள்ள பசுமாட்டை வெறிநாய் ஒன்று கடித்துள்ளது. இந்நிலையில், அந்த பசுமாடு வெறிபிடித்து சாலைகளில் செல்வோரை துரத்தி துரத்தி முட்டுவதும், கடிப்பதுமாக இருந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகினர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் கிராம மக்கள், வெறிபிடித்து திரிந்த பசுவை பிடித்து அப்புறப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அத்தனையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அறந்தாங்கி கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து அறந்தாங்கி கோட்டாட்சியர் உத்தரவின்பேரில் தீயணைப்புத்துறை, கால்நடைத்துறை, வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம இளைஞர்களின் துணையோடு மாட்டை பிடித்து மயக்க மருந்து செலுத்தி அப்புறப்படுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com