கோவை: நாயை அடித்துக்கொன்று வீடியோ வெளியிட்ட இருவர் மீது வழக்குப்பதிவு

கோவை: நாயை அடித்துக்கொன்று வீடியோ வெளியிட்ட இருவர் மீது வழக்குப்பதிவு
கோவை: நாயை அடித்துக்கொன்று வீடியோ வெளியிட்ட இருவர் மீது வழக்குப்பதிவு

கோவை தனியார் கல்லூரியில் நாய் ஒன்றை அடித்துக் கொன்ற இருவர் மீது துடியலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சின்ன வேடப்பட்டி பகுதி அருகே அமைந்துள்ளது குமரகுரு தனியார் கல்லூரி. இந்தக் கல்லூரி வளாகத்தில் சுற்றி திரிந்த நாய் ஒன்றை கொடூரமாக அடித்து கொன்றதை, அக்கல்லூரியை சேர்ந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில் விலங்குகள் நல அமைப்பின் சட்ட ஆலோசகர் ஐஸ்வர்யா, அந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு துடியலூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் வீடியோவில் இருந்த இருவர் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாயை அடித்துக் கொன்றவர்கள் கல்லூரியில் துப்புரவு பணி மேற்கொள்பவர்கள் என தெரியவந்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக தனியார் கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விலங்குகள் நல அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com