எல்.முருகன் உள்ளிட்ட 250 பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

எல்.முருகன் உள்ளிட்ட 250 பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

எல்.முருகன் உள்ளிட்ட 250 பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!
Published on

பாஜக அலுவலக திறப்பு விழாவில் ஊரடங்கு விதிகள் மீறப்பட்டதாக எல்.முருகன் உள்ளிட்ட 250 பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் மாவட்ட பாஜக அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த எல்.முருகனுக்கு தியாகதுருகத்தில் பாஜக தொண்டர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினர்.

இதனையடுத்து, கள்ளக்குறிச்சியில் பாஜக அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இந்நிலையில், வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் அலுவலக திறப்பு உள்ளிட்டவற்றில் ஊரடங்கு விதிகளை மீறி கூட்டம் கூடியதாக கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் பாஜக தலைவர் முருகன் உட்பட சுமார் 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com