பள்ளிக்குச் சென்ற மாணவன்... கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோவால் நிகழ்ந்த விபரீதம்

பள்ளிக்குச் சென்ற மாணவன்... கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோவால் நிகழ்ந்த விபரீதம்
பள்ளிக்குச் சென்ற மாணவன்... கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோவால் நிகழ்ந்த விபரீதம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பள்ளிக்குச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே மாணவன் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள விராலூரைச் சேர்ந்த குழந்தைவேல் - சரஸ்வதி தம்பதியினரின் மகன் கனகராஜ்(12). விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் அவரது தந்தை குழந்தைவேல் தனது டிவிஎஸ் எக்ஸ்-எல் இரு சக்கர வாகனத்தில் கனகராஜை பள்ளிக்கு கூட்டிக்கொண்டு விராலிமலை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வானத்திராயன்பட்டி பிரிவு சாலை கருப்பர் கோயில் அருகே சென்றபோது பின்னால் வந்த சரக்கு ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் மாணவன் கனகராஜ் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் அவரது தந்தை குழந்தைவேல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவம் இடம் சென்று உயிரிழந்த மாணவனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com