மேட்டூர்: அரை டன் அளவுக்கு பனம்பழம் தின்றதால் உயிரிழந்த காட்டு யானை

மேட்டூர்: அரை டன் அளவுக்கு பனம்பழம் தின்றதால் உயிரிழந்த காட்டு யானை
மேட்டூர்: அரை டன் அளவுக்கு பனம்பழம் தின்றதால் உயிரிழந்த காட்டு யானை
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, அரை டன் அளவுக்கு பனம்பழம் தின்றதால் 22 வயதான காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.
முத்துமாரியம்மன் கோயில் - சாம்பார் பள்ளம் ஏரி காப்புக்காட்டில் ஆண் யானை ஒன்று இறந்துகிடந்ததை அறிந்த மேட்டூர் வனத்துறையினர், அரசு வன கால்நடை மருத்துவருடன் அங்கு சென்றனர். உடற்கூராய்வு செய்ததில், அந்த காட்டு யானை சுமார் அரை டன் அளவுக்கு பனம்பழம் தின்றதால் செரிமானம் ஆகாமல் வயிறு உப்பி உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து யானையிடம் தந்தங்களை அகற்றிய வனத்துறையினர், யானையின் உடலை காப்புக்காட்டிலேயே அடக்கம் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com