காஞ்சிபுரம்: மநீம கட்சி சார்பில் 21 வயது கல்லூரி மாணவி வேட்புமனு தாக்கல்

காஞ்சிபுரம்: மநீம கட்சி சார்பில் 21 வயது கல்லூரி மாணவி வேட்புமனு தாக்கல்
காஞ்சிபுரம்: மநீம கட்சி சார்பில் 21 வயது கல்லூரி மாணவி வேட்புமனு தாக்கல்

காஞ்சிபுரத்தில் 21 வயது கல்லூரி மாணவி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மநீம கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 

பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் தங்கள் தங்கள் கூட்டணி கட்சிகள் குறித்தும் தொகுதிகள் குறித்தும் விவரங்களை வெளியிட்டு வருகின்றனர். இளம்பெண்கள், கர்ப்பிணிகள் போன்றோரை வேட்பாளர்களாக அறிவித்து கவனம் ஈர்த்து வருகிறது மநீம.

அந்த வரிசையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 27 வது வார்டில் மக்கள் நீதி மையம் சார்பாக 21 வயது பொறியியல் கல்லூரி மாணவி பவித்ரா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நேற்று மதுரை மாநகராட்சி 14 வது வார்டில் 22 வயதான செவிலியர் இலக்கியா மநீம கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com