விழுப்புரம்: மரக்காணத்தில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய 20 டன் எடை ராட்சத திமிங்கலம்

விழுப்புரம்: மரக்காணத்தில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய 20 டன் எடை ராட்சத திமிங்கலம்
விழுப்புரம்: மரக்காணத்தில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய 20 டன் எடை ராட்சத திமிங்கலம்

மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் 20 டன் எடையுள்ள ராட்சத திமிங்கலம் இறந்து அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இதுபற்றி, வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியர்குப்பம் கடல் பகுதியில் 20 டன் எடை கொண்ட ராட்சத திமிங்கலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இன்று காலை மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்லும்போது, கரை அருகே பெரிய அளவில் ஒதுங்கியிருந்த திமிங்கலத்தை மீனவர்கள் கண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பத்துள்ளார்கள். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, 20 டன் எடை கொண்ட அந்த ராட்சத திமிங்கலம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், கப்பலில் அடிபட்டு திமிங்கலம் உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com