மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு - நியாயம் கேட்டு கண்ணீர் விடும் பெற்றோர்

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு - நியாயம் கேட்டு கண்ணீர் விடும் பெற்றோர்
மின்சாரம் பாய்ந்து சிறுவன்  உயிரிழப்பு - நியாயம் கேட்டு கண்ணீர் விடும் பெற்றோர்

நாய் கடித்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் போது, வங்கியின் பெயர் பலகையிலிருந்து மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தான்.

‌கடலூர் மாவட்டம் கருமாச்சிபாளையத்தை சேர்ந்த தம்பதி ராமதாஸும் அவரது மனைவி ராணியும். இவர்களின் மகன் தினேஷ் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்தச் சிறுவனை 2 நாட்களுக்கு முன் நாய் கடித்துள்ளது. இதனால், ஊசி போடுவதற்காக மருத்து‌வமனைக்கு செல்லும் போது தான் துயரம் நேர்ந்தது.

சாலையோரத்தில் இருந்த சிண்டிகேட் வங்கியின் பெயர் பலகை ஒளிரவேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பு, சிறுவன் தினேஷின் குடும்பத்தை மீள முடியா இருளில் தள்ளிவிட்டது. மின்சாரம் பாய்ந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். சிறுவன் உயிரிழக்க காரணமான வங்கியின் அலட்சியத்தைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மேலும், சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

படிப்போ, நிரந்தர வேலையோ இல்லாத தன் குடும்பத்தை, படித்து நல்ல நிலைக்கு மகன் கொண்டுவருவான் என்று நம்பிக்கொண்டிருந்த குடும்பத்தின் ஒற்றை நம்பிக்கையும் கருகிவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com