திருநின்றவூரில் கொரோனா தொற்று ஏற்பட்டவர் வீட்டில் முதியவர் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
திருநின்றவூர் கோமதிபுரத்தில் 67 வயது ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு கொரோனா இருப்பது நேற்று காலை உறுதி செய்யப்பட்டது. ஆனால் சுகாதாரத்துறையினர் இதுவரை அவரை சிகிச்சைக்கு அழைத்து செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரது வீட்டில் இருந்த அவரின் 90 வயது தந்தை உயிரிழந்தார். கொரொனா தொற்று ஏற்பட்டவர் வீட்டில் 90 வயது முதியவர் உயிர் இழந்தது அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. முதியவர் உயிரிழந்தது தெரிய வந்ததும் உறவினர்கள் கூட சென்று பார்க்க முடியாத நிலையில் முதியவரின் உடலுடன் கொரோனா பாதித்த நபரும் மன நலம் பாதித்த அவரது 15 வயது மகளும் உள்ளனர்.