எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: சுற்றறிக்கையால் குழப்பம்

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: சுற்றறிக்கையால் குழப்பம்

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: சுற்றறிக்கையால் குழப்பம்
Published on

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுத் தேர்வு இயக்ககம் அனுப்பிய சுற்றறிக்கை குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், அது தனித்தேர்வர்களுக்கானது எனக் குறிப்பிட்டு புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ள எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பளர்களை நியமிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுமதி அளிப்பதாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. நிரந்தர தேர்வு மையப் பட்டியல் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த சுற்றறிக்கையில் தனித்தேர்வர்கள் எனக் குறிப்பிடப்படாததால், குழப்பம் ஏற்பட்டது. மேலும், இந்த பிரச்னை பற்றி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும் தனித்தேர்வு என்பது பொதுத்தேர்வு என தவறுதலாக இடம்பெற்றதாக கூறியதாகவும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்ததாகவும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com