முத்தூட் மினி நிறுவனத்தில் 814 சவரன் நகை கொள்ளை

முத்தூட் மினி நிறுவனத்தில் 814 சவரன் நகை கொள்ளை

முத்தூட் மினி நிறுவனத்தில் 814 சவரன் நகை கொள்ளை
Published on

கோவை ராமநாதபுரத்தில் முத்தூட் மினி நிதி நிறுவனத்தில் 814 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

முகத்தை துணியால் மறைத்தபடி நிதி நிறுவனத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர், அங்கிருந்த 2 பெண் ஊழியர்களை தாக்கியதாக தெரிகிறது. தாக்குதலில் காயமடைந்த 2 பெண்களும் மயக்கமடைந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு சாவி மூலம் பெட்டக அறையை திறந்த அடையாளம் தெரியாத நபர், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து 4 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், சிசிடிவி காட்சி மூலம் கொள்ளையனை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை நடந்த நிதி நிறுவனத்தில் காவலாளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com