தமிழகத்திற்கு ரயிலில் வரும் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன்!

தமிழகத்திற்கு ரயிலில் வரும் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன்!
தமிழகத்திற்கு ரயிலில் வரும் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன்!

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவை அதிகரித்து வரும் நிலையில் அவற்றை கொள்முதல் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மேற்கு வங்காள மாநிலம் துர்காபூரில் இருந்து ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு சிறப்பு ரயில் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளது. 

இத்தகவலை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 4 பெரிய கண்டெய்னர்களில் 80 மெட்ரிக் டன் எடையுள்ள திரவ ஆக்சிஜனுடன் வரும் அந்த ரயில் சென்னை தண்டையார்பேட்டைக்கு வர உள்ளது. 

இது பின்னர் தேவையான பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும். ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் 100 சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கி வருகிறது. இவற்றின் மூலம் இதுவரை 2,620 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com