தேனி: சமத்துவபுர பூங்காவுக்காக தோண்டப்பட்ட பள்ளம்.. தவறி விழுந்த 8 வயது சிறுமி பலி!

தேனி: சமத்துவபுர பூங்காவுக்காக தோண்டப்பட்ட பள்ளம்.. தவறி விழுந்த 8 வயது சிறுமி பலி!
தேனி: சமத்துவபுர பூங்காவுக்காக தோண்டப்பட்ட பள்ளம்.. தவறி விழுந்த 8 வயது சிறுமி பலி!

தேனி அருகே சமத்துவபுர பூங்காவிற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.‌

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் பேரூராட்சி சார்பில் பூங்கா விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் நேற்று மூலக்காடு மந்திச்சுணை பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி ஹாசினி ராணி விழுந்து உயிரிழந்தார்.

இது போன்ற பலி சம்பவம் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்றும், சிறுமியின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிப்பதற்கு பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு சிறுமியின் தந்தை முத்துசரவணன் மற்றும் அவரது உறவினர்கள் தற்போது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

ஆனால் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் வீடியோ காண்ஃபரன்ஸில் இருப்பதாக கூறி அவர்களை காத்திருக்க வைத்ததால், இதையும் உறவினர்களும் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com