ராட்டினத்தில் அடிப்பட்டு சிறுவன் உயிரிழப்பு : மெரினாவில் சோகம்

ராட்டினத்தில் அடிப்பட்டு சிறுவன் உயிரிழப்பு : மெரினாவில் சோகம்

ராட்டினத்தில் அடிப்பட்டு சிறுவன் உயிரிழப்பு : மெரினாவில் சோகம்

சென்னை மெரினா கடற்கரையில், ராட்டினத்தில் அடிப்பட்டு 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த பத்மநாபன் என்பவர், மெரினா கடற்கரையில் பானிப்பூரி கடையை நடத்தி வருகிறார். இவர் நேற்று கடைக்கு வந்திருந்த போது, தனது 8 வயது மகன் பிரணவ் என்பவரையும் உடன் அழைத்து வந்திருந்தார். அப்போது அங்கு ராட்டினம் ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது. ராட்டினத்தை பார்த்ததும் சிறுவன் பிரணவ் அதன் அருகே ஓடியுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக ராட்டினத்தின் இரும்புக் கம்பி பிரணவின் தலையில் பலமாக அடித்துள்ளது. இதனால் சிறுவன் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். 

இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிறுவனை உடனே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர், ராட்டின உரிமையாளர் பிரகாஷை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், உடற்கூராய்வு செய்யாமல் தமது மகன் உடலை தருமாறு சிறுவனின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com