தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 16 ஆம் தேதி தமிழகம், இராமேஸ்வரம், பாம்பன் மற்றும் ஜெகாதப்பட்டனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதாக இலங்கை கடற்படையினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. 

கைது செய்யப்பட்ட மீனவர்களை மறுநாள் நீர் வளத்துறையினரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். இதனையடுத்து நீர் வளத்துறையினரால் தமிழக மீனவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். எட்டு மீனவர்களையும் 20ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மீனவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடற்சீற்றம் காரணமாகவே எல்லை மீனவர்கள் எல்லை தாண்டியதாக எடுத்துரைத்தனர்.

இதையடுத்து எல்லை தாண்டியதற்காக 8 மீனவர்களையும் நீதிபதி கடுமையாக எச்சரித்தார். அத்துடன் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக கைது செய்யப்பட்டால், ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என எச்சரித்து நிபந்தனைகளுடன் விடுதலை செய்தார். மேலும் மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட படகுகள் தொடர்பான விசாரணை வரும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி நடைபெறும் எனவும், அன்று படகின் உரிமையாளர் மன்றில் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com