இலங்கை கடற்படையால் 8 மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையால் 8 மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையால் 8 மீனவர்கள் கைது
Published on

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து நேற்று காலை 300க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருக்கின்றனர். மீன்பிடித்து விட்டு இன்று அதிகாலை கச்சத்தீவிற்கும் தனுஷ்கோடிக்கும் இடையே வந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை சேதப்படுத்தி, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் மற்று‌ம் மீன்பிடி சாதனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டை கொண்டு மீனவர்களை தாக்கியிருக்கின்றனர். 8 மீனவர்களை கைது செய்ததுடன், ஒரு படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். மீனவர்கள் பருத்தித்துறை கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும் பாரம்பரிய கடல்பகுதியில் பிரச்னையின்றி மீன்பிடிக்கவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com