தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட 8 மீனவர்கள் கேரளாவில் சடலமாக மீட்பு

தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட 8 மீனவர்கள் கேரளாவில் சடலமாக மீட்பு
தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட 8 மீனவர்கள் கேரளாவில் சடலமாக மீட்பு

கேரளாவில் இதுவரை சடலமாக மீட்கப்பட்ட 8 மீனவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. 

கேரளாவில் விழிஞ்ஞம் துறைமுகப் பகுதியில் நேற்று கரை ஒதுங்கிய 5 உடல்க‌ளில் ஒருவரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தூத்துகுடியைச் சேர்ந்த வின்சென்ட்டின் மகன் ஜூடு என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் 2 உடல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை திருவனந்தபுரம் பூந்துறை பகுதி மீனவர்கள் என அடையாளம் பெறப்பட்டு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று கரை ஒதுங்கிய 5 உடல்களில் ஒருவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்ட நிலையில், மற்ற நான்கு பேரின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை. 

சடலமாக மீட்கப்பட்ட மற்ற மீனவர்களை அடையாளம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com