திருப்பூர்: பள்ளியில் திடீரென மயங்கிய 7ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

திருப்பூர்: பள்ளியில் திடீரென மயங்கிய 7ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

திருப்பூர்: பள்ளியில் திடீரென மயங்கிய 7ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
Published on

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயிலும் மாணவி நிதர்சனா (12) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் நிதர்சனா (12). பொங்கலூர் காட்டூர் அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற நிதர்சனா திடீரென வாந்தி எடுத்து மயக்கமடைந்து விழுந்துள்ளார். உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் மாணவியை பொங்கலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவியை பல்லடம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பல்லடம் அரசு மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன் பாளையம் போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேர்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com