தமிழ்நாட்டில் மேலும் 7,427 பேருக்கு கொரோனா தொற்று - 189 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் மேலும் 7,427 பேருக்கு கொரோனா தொற்று - 189 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் மேலும் 7,427 பேருக்கு கொரோனா தொற்று - 189 பேர் உயிரிழப்பு
Published on

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,427 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 189 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 15,281 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 61,329 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

பாதிக்கப்பட்ட 7,427 பேரில் இருவர் ஆந்திரா மற்றும் ஒருவர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். இதுவரை தமிழ்நாட்டில் மொத்தமாக 24,29,924 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தலைநகர் சென்னையில் 439 பேர் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்திலேயே அதிகபட்சமாக கோவையில் 891 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் (511), திருப்பூர் (458), தஞ்சாவூர் (388), நாமக்கல் (314) மற்றும் செங்கல்பட்டு (310) ஆகிய மாவட்டங்கள் மாநில அளவில் நோய் தொற்று பாதிப்பில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

4,267 ஆண்களும், 3,160 பெண்களும் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இணை நோய்கள் இல்லாத 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com