பீலா ராஜேஷ், சத்யபிரதா சாகு, கார்த்திகேயன் உள்ளிட்ட ஏழு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளராக பதவி உயர்வு அளித்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவர்களுடன் ஸ்வர்ணா, ஆஷிஷ் வச்சானி, பங்கஜ் குமார் பன்சால், ஹர்ஷாகே மீனா உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் முதன்மை செயலாளர்களாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. இதில், பீலா ராஜேஷ் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்துள்ளார். அதேபோல, சத்ய பிரதா சாகு ஐ.ஏ.எஸ் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது