தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6,596 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 166 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 10,432 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 52,884 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை தமிழ்நாட்டில் மொத்தமாக 24,43,415 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் சென்னையில் 396 பேர் இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்திலேயே அதிகபட்சமாக கோவையில் 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் (472), திருப்பூர் (419), தஞ்சாவூர் (338), செங்கல்பட்டு (277) மற்றும் நாமக்கல் (269) ஆகிய மாவட்டங்கள் மாநில அளவில் நோய் தொற்று பாதிப்பில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.