கொரோனாவுக்கு மேலும் 63 பேர் உயிரிழப்பு - இணை நோய் இல்லாத 8 பேர் பலி

கொரோனாவுக்கு மேலும் 63 பேர் உயிரிழப்பு - இணை நோய் இல்லாத 8 பேர் பலி

கொரோனாவுக்கு மேலும் 63 பேர் உயிரிழப்பு - இணை நோய் இல்லாத 8 பேர் பலி
Published on

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றிற்கு மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல், சுமார் 50 பேர் நாள்தோறும் கொரோனாவுக்கு உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை சுகாதாரத்துறை நாள்தோறும் வெளியிட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள 63 பேரின் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதில், அரசு மருத்துவமனையில் 37 பேரும், தனியார் மருத்துவமனையில் 26 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் 50 வயதிற்குட்பட்ட 5 பேர் மரணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 41 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 1,264 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 929 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இதுவரை 335 பேர் மரணமடைந்துள்ளனர். இணை நோய்கள் இல்லாத 8 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு விகிதம் 1.34 சதவிதமாக உள்ளது.

அதேபோல், இன்றும் ஒரே நாளில் 3,882 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 2,852 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 52,926 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 2,182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 60,533 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com