தமிழ்நாடு
அடுத்தடுத்து 6 வாகனங்கள் மீது மோதிய லாரி - ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் விபரீதம்
அடுத்தடுத்து 6 வாகனங்கள் மீது மோதிய லாரி - ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் விபரீதம்
சென்னை பூந்தமல்லியில் லாரி ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துகளில் 6 வாகனங்கள் சேதமடைந்தன.
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கோயம்பேட்டிற்கு காங்க்ரீட் கலவை ஏற்றிச் சென்ற லாரி பூந்தமல்லி அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் இருந்த கார், பைக் உள்ளிட்ட 6 வாகனங்களை மோதித்தள்ளியது. இதை கண்டதும் அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். லாரி ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதே விபத்துக்கு காரணம் என பின்னர் தெரியவந்தது.
மயங்கியிருந்த லாரி ஓட்டுநர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இவ்விபத்தில் இருவக்கு காயம் ஏற்பட்டது. 5 வாகனங்கள் சேதமடைந்தன. லாரி மெதுவாக வந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.